Tuesday, December 29, 2009

விஷஊற்று

தூண்டிய திரியில்
அலையும் சுடரின் ஓலம் .

கரும்பாசிக் கண்ணிருட்டில்
விரிகிறது கனவு

ஓலம் குறைந்து
சிறுத்து மடியும் சுடர்.
நன்றி
என்னுடைய கவிதைகளை உள்ளுறை இதழிழ் வெளியிட்டமைக்கு நன்றி !

மரணம்

யார் என்னைத்
துரத்தி விளையாடுவது?

மரணம்.

நான் பட்டாம்பூச்சி அல்ல
பிரபஞ்ச விளிம்பை நோக்கி
திறந்து வைக்கப்படும்
ஜன்னல்.

பட்டாம்பூச்சி
மரணத்தின் மீது
அமர்ந்திருக்கிறது.

Saturday, December 26, 2009

விஷஊற்று-4

நெற்றிப்பொட்டில்
நிலைத்திருக்கும்
சிறகு விரித்த
பருந்தின் வடிவம்.
ஒளிவட்டப் பின்புலத்தில்
நிழழுருவாய் நகரும்
குருஷேத்திரக் காட்சிகள்
அர்ஜுனனா...
பார்த்தசாரதியா....
துரியோதனனா...?

குத்திட்ட அம்புடன்
'ராமா' என்றலறி
செத்தொழிந்தது மான்



..

Wednesday, December 23, 2009

விஷஊற்று

வெந்நீர் குளியல்.
ரோ ஜா மு க ம் .
நி த் ய கா ல ம்.

கணப்பொழுதில்
ம றை ந்தது வெ ளி ச்ச ம் .

ப ரவியது திரை எங்கும்.

சு வ ற்றி ல்
வா ல று ந் த ப ல் லி யி ன் சத்தம்
அ மை தி யை கி ழி க் கு ம் .

Tuesday, December 22, 2009

டி ச ம் ப ர் 2009


அடர்ந்த கானகத்தில்
தானற்ற வெறுமை

நீங்காத வடு
சுமந்து திரியும் கதி

அபத்த சரிவில்
உருண்டன கணங்கள்


Sunday, December 20, 2009

தமிழ் புதுக்கவிதை

தமிழ் புதுக்கவிதை